மாற்றுத்திறனாளிகளுக்கு சாலையோர தள்ளுவண்டி கடைகள் நடத்த முன்னுரிமை அளிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தெருவோர தள்ளுவண்டி கடைகள் நடத்துவதில் தகுதி இருக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கவும், இந்த திட்டத்தை தற்போதைய நிதி ஆண்டிலேயே தொடர்ந்திட உரிய ஆணை வழங்க இந்த அரசாணை தெரிவித்துள்ளது.
சாலை ஓரங்களில் மாற்றுத்திறனாளிகள் தள்ளுவண்டி கடைகளை நடத்த நகர விற்பனைக் குழுவின் விதிமுறைகளுக்கு உட்பட்டு மாற்றுத் திறனாளிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு ஒவ்வொரு மண்டல, வார்டு அளவில் நடைபெறும் ஒதுக்கீட்டில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்பட்ட இடங்களில் இடப்பற்றாக்குறை இருக்கும் போது மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். மாற்றுத்திரனாளிகளின் வீட்டிற்கு அருகில், விற்பனைக்குரிய இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ள இடங்களிலும் கடைகள் ஒதுக்கீடு செய்வதில் முன்னுரிமையை இந்த அரசாணை அளித்துள்ளது.