fbpx

என் சாவிற்கு இவர்கள் தான் காரணம்…..! வாட்சப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட கர்பிணிபெண்…..!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லைய நாயக்கன்பட்டியில் கூலி வேலை பார்க்கும் உத்தண்டுகாளை (33) என்பவர் இவருடைய முதல் மனைவி இவரிடமிருந்து விவாகரத்து பெற்று சென்று விட்டதால் இவர் சதானந்தபுரத்தில் வசிக்கும் வர்ஷினி (22) என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு 11 மாதத்தில் அபிநயா என்ற பெண் குழந்தை இருக்கிறது. தற்சமயம் வர்ஷினி 4 மாத கர்ப்பிணியாக உள்ளார். இத்தகைய நிலையில், வர்ஷினியின் மாமனார் கருப்புசாமி, மாமியார் சோலையம்மாள் உள்ளிட்ட இருவரும் அடிக்கடி வர்ஷினியை வசைப்பாடி வந்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, மன உளைச்சலுக்கு ஆளான வர்ஷினி என்னுடைய மரணத்திற்கு மாமனார் மற்றும் மாமியார் தான் காரணம் என்று வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இதனை பார்த்து அதிர்ந்து போன கணவர் உத்தண்டுகாளை வீட்டிற்கு விரைந்து வந்து தன்னுடைய மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்து கதறி அழுதார்.

இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து வர்ஷினியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அதோடு இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றன. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தில் அமைந்திருக்கும் சிறப்பம்சங்கள்……!

Thu Apr 27 , 2023
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையத்தை சென்ற 8ம் தேதி தமிழக அந்த பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார் இந்த புதிய ஒருங்கிணைந்த மையம் நேற்று பயன்பாட்டுக்கு வந்தது. இந்த புதிய பன்னாட்டு நிலையம் இந்திய தமிழ்நாட்டு கலாச்சாரம், புராதான சின்னங்கள், பிரசித்தி பெற்ற கோவில்கள் போன்ற புராதான சின்னங்களுடன் அமைக்கப்பட்டிருக்கிறது. அதன் பின்னர் இந்த புதிய முனையத்தில் புதிய தொழில்நுட்பத்துடன் பயணிகளுக்கு […]

You May Like