நாளை வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்படுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாடு முழுவதும் மழை பெய்யலாம் என்று கூறப்படுகிறது.
நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, நாளை மறுநாள் தமிழ்நாடு முழுவதும் மழை பெய்யும் என்று கூறப்படுகிறது. அதன் காரணமாக, அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு தொகுதி நாளை உருவாகி அதன் பிறகு புயலாக வலுபெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், மீனவர்கள் இன்று மாலைக்கும் கரைக்கு திரும்ப வேண்டும் என்று மீன்வளத்துறை அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்து இருக்கிறது. அதோடு நாளை முதல் மறு அறிவிப்பு வரும் வரையில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.