fbpx

16 வயது மாணவியை சீரழித்த 65 வயது முதியவர்…..! நாமக்கல் அருகே கொடூரம்….!

நாமக்கல் மாவட்டம் சீராப்பள்ளியைச் சேர்ந்த 16 வயது மாணவி நாமகிரிப்பேட்டையில் உள்ள அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வந்தபோது அதிபகுதியைச் சேர்ந்த வீரமுத்து (65) என்ற முதியவர் கடந்த 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி வீட்டில் தனியாக இருந்த மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார்.

இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி அடிக்கடி மாணவியை அந்த முதியவர் சீரழித்து வந்தார் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, கடந்த 2020 ஆம் வருடம் மாணவி 11ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிக் கொண்டிருந்த போது திடீரென்று மயங்கி விழுந்தார். இதனால் பதறிப்போன ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அந்த மாணவி கர்ப்பமாக இருப்பதை கண்டுபிடித்தனர். மேலும் அன்றைய தினமே அந்த மாணவிக்கு பெண் குழந்தை பிறந்திருக்கிறது.

இது குறித்து சிறுமியின் தாய் ராசிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். இந்த புகாரை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து வீரமுத்துவை கைது செய்தனர்.

இது குறித்த வழக்கு நாமக்கல் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கு விசாரணை முடிவடைந்து தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதில் பள்ளி மாணவியை கர்ப்பம் ஆக்கிய முதியவர் வீரமுத்துவுக்கு 20 ஆண்டுகால சிறை தண்டனை மற்றும் 5000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கியிருக்கிறது நீதிமன்றம்.

Next Post

சென்னையில் சட்ட விரோதமாக விபச்சார தொழில் செய்த 55 பேர் அதிரடி கைது…..! 94 பெண்கள் மீட்பு காவல்துறையினர் வெளியிட்ட தகவல்….!

Thu May 18 , 2023
தலைநகர் சென்னையில் விபச்சார தடுப்பு பிரிவு காவல் துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. இது தொடர்பாக சென்னை மாநகர காவல் துறை ஆணையர் அலுவலகம் வீட்டில் உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது சென்ற ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரையில் 34 விபச்சார வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதோடு விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 94 பெண்கள் மீட்கப்பட்டு அரசு காப்பகங்களில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, விபச்சாரத்தில் […]

You May Like