fbpx

சென்னை அருகே…..! வலி நிவாரண மாத்திரையை போதைப் பொருளாக விற்பனை செய்த 2 பெண்கள் உட்பட 6 பேர் அதிரடி கைது….!

போதைப் பொருள் கடத்தல், விற்பனை மற்றும் பதுக்கலை தடுப்பதற்காக தலைநகர் சென்னையில் போதை தடுப்புக்கான நடவடிக்கை என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார் காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால்.

அதன் அடிப்படையில், அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படை அமைக்கப்பட்டிருக்கிறது. இதன் ஒரு கட்டமாக, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் துறை ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் நேற்று முன்தினம் காலை சூளைமேடு, எம்ஜிஆர் நகர் போன்ற பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது கஞ்சா மற்றும் உடல் வலி நிவாரண மாத்திரைகளை போதைப் பொருட்களாக விற்பனை செய்ததாக மதுரவாயல் ஆனந்தன் (23) சைதாப்பேட்டை திவாகர்(24), அதே பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார்( 23), சுந்தரராஜன் (23) உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களிடமிருந்து 330 உடல் வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு கடத்திவரப்பட்ட கஞ்சா பொட்டலங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதேபோல பெண் கஞ்சா வியாபாரிகள் ஓட்டேரி அன்பழகி (25), கொருக்குப்பேட்டை பத்மா(55) உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டிருக்கின்றன. கைதான 6 பேரும் நீதிமன்ற காதலில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Next Post

ஓசூர் அருகே கஞ்சா சாக்லேட் விற்பனை அதிகரிப்பு…..! இளைஞர்கள் மாணவர்கள் பாதிக்கும் அபாயம் தமிழகத்தில் என்னதான் நடக்கிறது…..!

Thu May 18 , 2023
ஓசூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் பெரிய தொழிற்சாலைகள் இருக்கின்றன. இங்கே தமிழகம் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்களை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக வட மாநில இளைஞர்கள் அதிகம் பணியாற்றுகிறார்கள். இங்கே பணியாற்றும் வடமாநில இளைஞர்கள் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை பயன்படுத்தும் பழக்கம் இருப்பவர்களாக உள்ளனர். இவர்களை குறி வைத்து புகையிலை பொருட்கள் மறைமுகமாக விற்பனை செய்யப்படுவது […]

You May Like