விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 41 வயதான எலக்ட்ரீசியன் இவர் சென்ற மார்ச் மாதம் 13ஆம் தேதி குடிபோதையில் இருந்தபோது, தன்னுடைய மகளுக்கு பாலியல் தொல்லை வழங்கியதாக கூறப்படுகிறது இதனால் பயந்து போன சிறுமி தன்னுடைய தாயிடம் இது தொடர்பாக கூறி அழுது இருக்கிறார்.
இதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்த தாய், இந்த விவகாரம் குறித்து ராஜபாளையம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார். ஆகவே சிறுமியின் தந்தையை காவல்துறையினர் கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த புகார் தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இத்தகைய நிலையில், குற்றம் சுமத்தப்பட்ட அந்த சிறுமியின் தந்தைக்கு 5 வருட கால சிறை தண்டனையும் 2000 ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி பூரண ஜெய ஆனந்த் தீர்ப்பு வழங்கியுள்ளார். அதோடு பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அவர் பரிந்துரை செய்திருக்கிறார். இந்த வழக்கு ஆரம்பிக்கப்பட்ட 68 நாளில் முடித்து வைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது