fbpx

6️ வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை…..!

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வயலப்பாடி கீரனூர் மாரியம்மன் கோவில் தெருவில் வசித்து வந்தவர் மணி( 77). இவர் 2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 6 வயது சிறுமி ஒருவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்திருக்கிறார். இதன் காரணமாக, சிறுமியின் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் குன்னம் காவல்துறையில் வழங்கிய புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து மணியை அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பிறகு மணி ஜாமினில் வெளியே வந்தார்.

பெரம்பலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து நீதிபதி எஸ் முத்துக்குமாரவேல் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கினார். அதில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் மணிக்கு 20 வருட காலம் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 20 ஆயிரம் ரூபாய் அபராதம் உள்ளிட்டவற்றை விதித்து தீர்ப்பு வழங்கினார் இதனை தொடர்ந்து, மணியை காவல்துறையினர் பாதுகாப்புடன் அழைத்துச் சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞர் சுந்தர்ராஜன் ஆஜர் ஆனார்.

Next Post

ஆக்ஸிஜன் ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்து...! 6 பேர் உயிரிழப்பு... 30 பேர் படுகாயம்...! ‌

Sun Mar 5 , 2023
பங்களாதேஷில் உள்ள கேஷப்பூர் பகுதியில் உள்ள ஆக்ஸிஜன் ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். பங்களாதேஷில் உள்ள கேஷப்பூர் பகுதியில் உள்ள ஆக்ஸிஜன் ஆலையில் ஏற்பட்ட வெடிப்பில் குறைந்தது ஆறு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் 30 பேர் படுகாயமடைந்தனர். இந்த வெடிவிபத்தால் அருகில் உள்ள கட்டிடங்கள் இரண்டு சதுர கிலோமீட்டர் எல்லைக்குள் குலுங்கின. இந்த வெடிப்புச் சம்பவத்திற்குப் பின்னர் கேஷப்பூர் பகுதியில் உள்ள ஆக்ஸிஜன் ஆலையில் […]

You May Like