கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்துள்ள இனுங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் பழனியப்பன் (55). திருமணமான இவர், திருச்சி மற்றும் குளித்தலை நீதிமன்றங்களில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று தன்னுடைய வீட்டில் இருந்த போது அதே பகுதியில் அருகில் இருக்கக்கூடிய ஒரு வீட்டு வசிக்கும் 3 வயது சிறுமி வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது பழனியப்பன் அந்த சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இது தொடர்பாக சிறுமியின் தாயார் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழங்கிய புகாரின் அடிப்படையில் பழனியப்பன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நேற்று அவரை கைது செய்தனர்.