fbpx

இன்று கூடுகிறது தமிழக அமைச்சரவை…..! முதலமைச்சர் முக்கிய விவகாரம் தொடர்பாக ஆலோசனை…..!

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று மாலை தொடங்குகிறது. இதில் 2023-24 ஆம் நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கைக்கு ஒப்புதல் பெறப்படலாம் என்று கூறப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவையில் வரும் 20ம் தேதி காலை 10 மணியளவில் மாநில நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். இதனை தொடர்ந்து, மறுநாள் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு நிதிநிலை அறிக்கையில் வெளியிடப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இதை தவிர மாணவர்கள் இளைஞர்களுக்கான பல புதிய திட்டங்கள் நிதிநிலை அறிக்கையில் வெளியாக இருக்கின்றன.

இவை அனைத்திற்கும் இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்படும் என்று கூறப்படுகின்றது. ஆனாலும் தனியார் தொழில் திட்டங்களுக்கான ஒப்புதலும் வழங்கப்படலாம் என்று தகவல் கிடைத்திருக்கிறது. இதை தவிர்த்து ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படலாம் என்று பேசப்பட்டு வருகிறது.

Next Post

கோடை காலத்தில் மின் தட்டுப்பாடு இருக்காது.. அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன குட்நியூஸ்...

Thu Mar 9 , 2023
கோடை காலத்தில் மின் தட்டுப்பாடு இருக்காது என்று மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.. விவசாயிகளுக்கு 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் தர வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.. இந்நிலையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இதற்கு பதிலளித்தார்.. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் “ விவசாயிகள் மீது அக்கறை உள்ளது போல் எடப்பாடி பழனிசாமி பேசுகிறார்.. அதிமுக ஆட்சியில் டெல்டா மாவட்டங்களில் 12 […]
மின்சார சட்டத்திருத்த மசோதாவை திரும்பப் பெறும் வரை...! - அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி

You May Like