fbpx

காவிரியில் கழிவுநீர் கலப்பதா…..? ஆவேசமடைந்த தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு…..!

காவிரி ஆற்றில் கழிவு நீர் கலப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகத் தொடங்கினர். ஆகவே கர்நாடக மாநில தலைமைச் செயலாளருக்கு தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் நடப்பாண்டு நீர் வழங்கும் காலத்தில் இதுவரையில் 658 டி எம் சி தண்ணீர் தமிழகத்திற்கு கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயித்த அளவை விடவும் இது 484 டிஎம்சி கூடுதல் நீர் எனவும் கூறியுள்ளார்.

அதேசமயம் பெங்களூரு நகர பகுதிகளில் இருக்கின்ற குடியிருப்புகள் வர்த்தக நிறுவனங்கள் தொழிற்சாலைகள் வெளிநாட்டில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நேரடியாக காவிரி ஆற்றில் கலப்பதாக அவர் குற்றம் சுமத்தி இருக்கிறார்.

அதோடு காவேரி ஆற்றின் ஆங்காங்கே பச்சை நிறத்துடன் சாக்கடை நீர் ஓடிக்கொண்டிருப்பதாகவும், முறைப்படி கிடைக்கும் நீரில் பெருமளவு கழிவுநீராகவே இருப்பதாகவும் அவர் சாடி இருக்கிறார். ஆகவே காவிரியின் கழிவுநீர் கலப்பதை தடுக்க தேவைப்படும் நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்பு இந்த கடிதத்தின் மூலமாக கர்நாடக மாநில அரசை கேட்டுக் கொண்டுள்ளார்

Next Post

மாபெரும் வெற்றி பாதையில் பொன்னியின் செல்வன் 2……! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா….?

Sat Apr 29 , 2023
இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்களே சேர்ந்து நடித்து உருவாக்கப்பட்ட திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி மாபெரும் வெற்றியை சந்தித்த நிலையில், நேற்று இந்த திரைப்படத்தின் 2வது பாகம் வெளியானது. முதல் ஷோவில் இருந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த திரைப்படத்தின் வெற்றிப் பாதை பிரகாசமாக இருக்கிறது. திரைப்படம் […]

You May Like