பார்வை திறனாற்றவர்கள் ப்ரெய்லி எழுத்துக்களை படிப்பதற்கு உதவி புரியும் எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில்,
தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக பார்வை திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரெய்லி எழுத்துக்களை மின்னணு முறையில் வாசிப்பதற்கு உதவி புரியும் கருவிகள் 2023 24 ஆம் வருடத்தில் பெற தேவைப்படும் விண்ணப்பங்கள் எல்லாவற்றையும் அந்தந்த மாவட்டங்களில் இருக்கின்ற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்கள் மூலமாக வழங்கப்படுகிறது என்று கூறியுள்ளது.
இதனை பெறுவதற்கு விண்ணப்பம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் பாதிக்கப்பட்டுருக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். இளநிலை கல்வி படிப்பவராகவோ அல்லது முதுநிலை கல்வி படிப்பாராகவோ இருக்க வேண்டும், பட்டப்படிப்பு முடித்தவர்கள் டிஎன்பிஎஸ்சி, டெட் தேர்வு பயிற்சி பெறுவராக இருக்க வேண்டும்.
அதோடு, ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் உள்ளிட்டவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.