fbpx

தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….! நாளை முதல் ரேஷன் கடைகளில் இந்தப் பொருட்களும் கிடைக்கும்…..!

தமிழ்நாடு முழுவதும் நியாய விலை கடைகளில் ஏழை, எளிய மக்களுக்கு இலவசமாகவும், மலிவான விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே நேரம் பொதுமக்களின் வசதிக்காக அவ்வப்போது நியாய விலை கடைகளில் புதுப்புது வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்சமயம் நியாய விலை கடைகளில் கூடுதலாக சில பொருட்களை விற்பனை செய்வதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது கூட்டுறவு பண்டகச் சாலைகள் மூலமாக சற்றேற குறைய 1254 கோடி வர்த்தகம் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இந்த வருமானத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக பொதுமக்களின் வசதிக்காகவும் ஆவின் பொருள்களை நியாய விலை கடைகளில் விற்பனை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. நியாய விலை கடைகளில் ஆவின் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதற்கான இந்த திட்டம் நாளை முதல் அனைத்து மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்படும் என்று தமிழக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

அதே நேரம் பொதுமக்கள் நியாய விலை கடைகள் மூலமாக யுபிஐ சேவைகளை பயன்படுத்தி எளிமையான முறையில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என்றும் அரசு தெரிவித்து இருக்கிறது.

Next Post

பிளஸ் 2 மாணவர்களே இன்று முதல் மறு கூட்டலுக்கு விண்ணப்பம் செய்யலாம்…..! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு……!

Tue May 9 , 2023
தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை நேற்றைய தினம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இந்த பொது தேர்வில் ஒட்டுமொத்தமாக 94.3% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதில் 97.85% தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. திருப்பூர் மாவட்டம் 2வது இடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் 3வது இடத்தையும் பிடித்திருக்கின்ற நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் கடைசி இடத்தை கைப்பற்றி உள்ளது. அதே நேரம் 326 அரசு […]
பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தக்கம்...! எப்போது தெரியுமா? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு..!

You May Like