தமிழகத்தில் 12ம் வகுப்பு பொது தேர்வு மார்ச் மாதம் 13ஆம் தேதி ஆரம்பமாகி ஏப்ரல் மாதம் 3ம் தேதி வரையில் நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் மே மாதம் 5ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் மே மாதம் ஏழாம் தேதி நீட் தேர்வு நடைபெற இருப்பதால் இந்த 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வேறு வேலைக்கு மாற்றி அமைக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நேற்றைய தினம் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் மே மாதம் 8ம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது