அரியலூர் மாவட்டம் விக்ரம் மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் கலியன் என்கிற கருணாநிதி (54) இவர் கூலி வேலை செய்து வருகிறார் இவர் கடந்த மாதம் ஜூலை 8 வயதான சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதையே அந்த முதியவர் பலமுறை சிறுமியிடம் லாபகமாக பேசி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார், மேலும் இதை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் கூறி உள்ளார். அதனால் பயந்து போன அந்த சிறுமி யாரிடமும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார்.அந்த சிறுமி பேற்றோரிடம் முதியோர் குறித்து கூறியுள்ளார் .இதை கேட்ட அந்த சிறுமியின் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பின்பு அவர்கள் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம் சென்று அங்கு புகார் கொடுத்துள்ளனர். இதனை தொடர்ந்து கலியன் என்கிற கருணாநிதியை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர் .
இந்த வழக்கு தொடர்பாக அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. அதனை தொடர்ந்து அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்தன் அந்த முதியவருக்கு 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக ஆயுள் தண்டனை வழங்கினார்.