fbpx

நடத்துனருக்கு எமனாய் வந்த நாய்.. பஸ்ஸின் குறுக்கே பாய்ந்ததால் பிரேக் போட்ட ஓட்டுனர்.. நடத்துனர் பலி..!

சேலம் அத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (56). இவர் சேலம் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக வேலை செய்து வருகிறார். இன்று காலை ராஜேந்திரன், சேலம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து செட்டிசாவடி செல்லும் டவுன் பேருந்தில் நடத்துநராக சென்றார். இந்த பேருந்தை ஓட்டுநர் சீனிவாசன் ஓட்டிச் சென்றார்.

இந்த பேருந்து இன்று காலை 8:00 மணி அளவில், பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு செட்டிச் சாவடிக்கு சென்றது. பிறகு அங்கிருந்து புறப்பட்டு பழைய பேருந்து நிலையம் நோக்கி வந்தது கொண்டிருந்தது. அப்போது பசவக்கல் பஸ் ஸ்டாப் அருகே வந்துபோது, நாய் ஒன்று பஸ் இன் குறுக்கே வந்தது. அதனை பார்த்த சீனிவாசன் நாய் மீது மோதாமல் இருக்க சடன் பிரேக் போட்டார்.

அப்போது பேருந்தின் முன்பக்க படிகட்டில் நின்று கொண்டிருந்த நடத்துநர் ராஜேந்திரன் பஸ்ஸிலிருந்து கீழே சாலையில் விழுந்தார். கீழே விழுந்த நடத்துனர் ராஜேந்திரனின் தலையில் பலமாக அடிப்பட்டு, துடிதுடித்து உயிருக்கு போராடினார். உடனடியாக ராஜேந்திரனை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர், ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து கன்னங்குறிச்சி காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

Baskar

Next Post

’வாரிசு’ படத்தில் விஜய்யுடன் நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்..! அவரே வெளியிட்ட பதிவு..!

Tue Aug 23 , 2022
’வாரிசு’ படத்தில் நடிகர் விஜய்யுடன் நடிப்பதாகவும், மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் பிக்பாஸ் பிரபலம் கணேஷ் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார். இயக்குநர் நெல்சன் திலீப் குமாரின் “பீஸ்ட்” திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனம் பெற்றது. அதன்பிறகு, வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் ’வாரிசு’ என்ற படத்தில் நடத்து வருகிறார். இதற்கிடையே, இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில காட்சிகளும் அவ்வப்போது வெளியாகி படக்குழுவினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. […]
நாளை வெளியாகும் வாரிசு படத்தின் 2-வது பாடல்..!! இது விஜய்க்கு முக்கியமான நாள்..!! எதனால் தெரியுமா?

You May Like