fbpx

நீண்ட நேரமாக திறக்கப்படாமல் இருந்த விடுதி அறையின் கதவுகள்….! காவல்துறையினருக்கு காத்திருந்த அதிர்ச்சி….!

தற்போது ஆண் மற்றும் பெண்களிடையே தேவையில்லாத எண்ணங்கள் தேவையில்லாத உறவு முறைகள் உள்ளிட்டவை உருவாகி வருகின்றனர். அப்படி தேவையற்ற உறவு முறையில் ஈடுபடுவதால் பல இன்னல்களை அவர்கள் சந்திக்க நேரிடுகிறது.

ஆனால் இவர்களுக்குள் என்ன உறவு முறை? இவர்களுக்குள் என்ன நடந்திருக்கும்? என்பதை சற்றும் கணிக்க முடியாத அளவிற்கு தலைநகர் டெல்லியில் ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது.

டெல்லியின் பாவனா பகுதியில் இருக்கின்ற ஒரு தனியார் விடுதியில் சென்ற 10ம் தேதி ஒரு ஜோடி வாடகைக்கு அறை எடுத்து தங்கியுள்ளது. ஆனால் அரக்காக ஒதுக்கப்பட்ட வாடகை நேரம் முடிவடைந்த பிறகும் கூட அந்த ஜோடி வெளியே வரவில்லை என்று சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து மாற்று சாவியை வைத்து விடுதியின் ஊழியர்கள் அந்த அறையை திறந்து பார்த்தபோது அவர்களுக்கு அங்கே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த ஜோடி அந்த அறையில் பிணமாக கிடந்ததை கண்ட விடுதி ஊழியர்கள் அதிர்ச்சிக்குள்ளாகி, இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் அங்கே சடலமாக கிடந்த ஆண் மற்றும் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில், சுடலமாக கிடந்த பெண்ணின் கழுத்து பகுதியில் ரத்த காயங்கள் இருந்ததாக கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்தப் பெண்ணை கொலை செய்து விட்டு, அந்த இளைஞரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று காவல்துறையினரின் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அறையில் இருந்து போதை பொருள், மதுபான பாட்டில்கள் உள்ளிட்டவை கண்டெடுக்கப்பட்டிருக்கின்றனர். இருவரிடமும் இருந்து கண்டெடுக்கப்பட்ட அடையாள அட்டையை வைத்து, இறந்து போன ஆண் பெயர் விமல் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ச்சியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆனால் இந்த ஜோடிகளுக்குள் என்ன உறவு? இவர்களுக்குள் என்ன பிரச்சனை? எதற்காக அந்த அறைக்கு வந்து தங்கி தற்கொலை செய்து கொண்டார்கள்? என்பது உள்ளிட்ட விபரங்கள் இதுவரையிலும் தெரியவில்லை. ஆகவே காவல்துறையினர் தங்களுடைய அதிரடி விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.

Next Post

நெய்வேலியில் கண்டெடுக்கப்பட்ட நாட்டு வெடிகுண்டு….! அதிர்ச்சியில் காவல்துறை….!

Thu Jan 12 , 2023
தமிழகத்தில் சமீப காலமாக வெடிகுண்டு கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இதனால் வட இந்தியாவில் இருப்பதைப் போன்ற பயங்கரவாத சம்பவங்கள் தமிழகத்திலும் நடைபெறலாம் என்ற அச்சம் காணப்படுகிறது. தமிழக அரசும், காவல்துறையும் இது போன்ற செயல்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் அது வெறும் கண் துடைப்பு மட்டுமே என்று எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் பகுதியில் முன் விரோதம் காரணமாக, நாட்டு வெடிகுண்டை பயன்படுத்தி […]
பக்கத்து வீட்டுக்காரரை பழிவாங்க மனித வெடிகுண்டாக மாறிய நபர்..? காவல்துறையை அலறவிட்டவர் அதிரடி கைது..!

You May Like