fbpx

பைக் தரவில்லை என்று மகனின் கையை வெட்டிய தந்தை.. மகன் உயிர் இழப்பு..!

மத்தியப் பிரதேசம் மாநிலம் தாமோவில் பைக் சாவிக்காக நடந்த சண்டையில், தந்தை கோடரியால் மகனின் கையை வெட்டியதால் அதிக அளவில் ரத்தம் வெளியேறி 21 வயது மகன் உயிரிழந்தார். மோதி படேல் (51), இவரது மூத்த மகன் ராம் கிசான் (24), இருவரும் வெளியே செல்வதற்காக அவரது இளைய மகன் சந்தோஷ் படேலிடம் பைக் சாவியைக் கேட்டனர். சந்தோஷ் சாவியை கொடுக்காததால், அவர்களிடையே சண்டை ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆத்திரமடைந்த மோதி, ராம் கிசான் இருவரும் சந்தோஷை அடித்துள்ளனர். தந்தை மோதி சந்தோஷின் இடது கையை கோடரியால் வெட்டி துண்டித்துள்ளார். பிறகு அவர் கோடரி மற்றும் துண்டாக்கப்பட்ட கையுடன் காவல் நிலையத்திற்கு சென்று நடந்ததைசொல்லியுள்ளார். இதையடுத்து காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சந்தோஷை அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். அதன் பிறகு அவர் மாவட்ட ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அங்கு அவரை மேற்சிகிச்சைக்காக ஜபால்பூருக்கு அழைத்துச் செல்லும்படி டாக்டர்கள் அறிவுறுத்தினர். அவ்வாறு ஜபால்பூருக்கு கொண்டு செல்லும் வழியில் அதிக அளவில் ரத்தம் வெளியேறியதால் சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார். காவல்துறையினர் மோதி, ராம் கிசான் இருவரையும் கைது செய்துள்ளனர்.

Rupa

Next Post

" மக்களே.. பண வீக்கம் காரணமாக ரெப்போ விகிதம் 5.4 சதவீதமாக உயர்த்தி அறிவிப்பு...!

Sat Aug 6 , 2022
வணிக வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடனுக்கான வட்டியான ரெப்போ வட்டி விகிதம் அரை சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. உலகில் நிலவும் அசாதாரண சூழல், உள்நாட்டுப் பொருளாதார நடவடிக்கைகளில் காணப்படும் பின்னடைவு, எதிர்பாராத பணவீக்க அதிகரிப்பு ஆகியவற்றின் காரணமாக, ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில், 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து 5.40 சதவீதமாக உயர்த்தியுள்ளது. பணவீக்கம் மற்றும் மேலும் அதிகரிக்கவுள்ள பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியதால், ரிசர்வ் வங்கியின் நிதிக் […]

You May Like