fbpx

கள்ள காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை போட்டுத் தள்ளிய மனைவியை தட்டி தூக்கிய காவல்துறை…..!

புதுச்சேரி மூலக்குளம் ஜே.ஜே நகரை சேர்ந்தவர் பிரான்சிஸ்( 28) இவருடைய மனைவி மேரி (26). இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில் வழக்கம் போல இந்த தம்பதியினர் இருவரும் கடந்த 5ம் தேதி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது தன்னுடைய கணவரின் அலறல் சத்தத்தை கேட்டு மனைவி ஏவி மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.

அப்போது பிரான்சிஸ் உடல் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், அவர் மீது இருந்த தீயை அணைத்து அவரை ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவருக்கு அங்கே தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக ரெட்டியார் பாளையம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

ஒருவரும் இது தொடர்பான விசாரணை நடந்து கொண்டிருந்தாலும், மறுபுறம் காவல்துறையினருக்கு பிரான்சிஸ் மனைவி மேரியின் மீது சந்தேகம் எழவே அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். காவல்துறையினர் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, பிரான்ஸிஸ் மனைவி ஜனோவா மேரிக்கு அதே பகுதியை சேர்ந்த பிளம்பர் கணேசன் (26) என்ற நபருடன் கள்ளக்காதல் விருந்து வந்தது இவர்களுடைய கள்ளக்காதல் விவகாரம் மேரியின் கணவர் பிரான்சிஸ்க்கு தெரிய வந்ததை தொடர்ந்து, தன்னுடைய மனைவியை பிரான்சிஸ் கண்டித்து இருக்கிறார். ஆனால் மேரி இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

இத்தகைய சூழ்நிலையில் தான் தன்னுடைய கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த பிரான்சிஸை அவர் உறங்கிக் கொண்டிருந்த போது அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து எரித்திருக்கிறார் மேரி. அதன் பின்னர் அக்கம்பக்கத்தினரிடம் வந்து ப்ரான்சிஸ் மீது 2 பேர் பெட்ரோல் வீசிவிட்டு சென்றுவிட்டதாக நாடகமாடி இருக்கிறார் மேரி. இது குறித்து மேரி மற்றும் கணேசன் உள்ளிட்டோரை காவல்துறையினர் கைது செய்து இருக்கிறார்கள். மேலும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பதால் தூங்கிக்கொண்டிருந்த பிரான்சிஸ் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்து கொலை செய்தது தெரியவந்தது. பின்னர் அக்கம் பக்கத்தினரிடம், 2 பேர் பிரான்சிஸ் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு சென்றதாக நாடகமாடியுள்ளார். இதுதொடர்பாக மேரி மற்றும் கணேசனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Post

'நீங்கள் பிரதமர் தான், கடவுள் இல்லை..' மோடியை கடுமையாக விமர்சித்த காங்கிரஸ்..

Mon Mar 13 , 2023
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, சமீபத்தில் இங்கிலாந்து நாட்டிற்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.. அப்போது மோடி ஆட்சியின் கீழ் இந்திய ஜனநாயகம் கொடூர தாக்குதலுக்கு உள்ளாகிறது என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.. அவரின் இந்த கருத்துக்கு பாஜக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.. இந்நிலையில் நேற்று கர்நாடகாவில் உரையாற்றிய மோடி, ராகுல்காந்தியை பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.. சமீபத்திய இங்கிலாந்து பயணத்தின் போது, ராகுல் காந்தி கூறிய கருத்துகள் குறித்து இந்தியாவின் பாரம்பரியத்தையும் அதன் குடிமக்களையும் […]

You May Like