மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று திருப்பூர் துரைசாமி உள்நோக்கத்துடன் தெரிவித்துள்ளார் என்று வைகோ கூறியுள்ளார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக துரைசாமியை மதிமுகவிற்கு எதிர்காலம் என்று ஒன்று கிடையாது. அதன் காரணமாக, தற்போது திமுகவிடம் சரணடைந்தது நல்லது.
திமுகவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் ஆனால் கட்சியில் இணைய மாட்டேன் என்று வைகோ தெரிவித்துள்ளார். அவரோடு மதிமுக என்ற கட்சியை தொடங்கிய நோக்கம் தற்போது அந்த கட்சியில் இல்லை. மேலும் கட்சி பலவீனமடைந்துள்ளது என்று துரைசாமி கூறியுள்ளார்.
அதோடு கிளை கழகம் அமைப்பதற்கு 100 பேர் உறுப்பினர்களாக இருக்க வேண்டும் ஆனால் பொய்யான பெயர்களை பதிவு செய்து ஏமாற்றி வருகிறார்கள். என்னுடைய கேள்விக்கு பதில் சொல்ல இயலாததால் என்னை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்று வைகோ தெரிவிக்கிறார் என்று துரைசாமி விமர்சனம் செய்திருக்கிறார்.