கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அடுத்து உள்ள பெட்டமுகிளாலம் பகுதியில் உள்ள 10 வயது சிறுமி குடிப்பது போலவும், பீடி புகைப்பது போலவும் வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களில் கடந்த மாதம் ஒரு வீடியோ வைரலாக பரவியது. இது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுபற்றி கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் தீவிர விசாரணை செய்தனர். அப்போது சிறுமிக்கு இளைஞர்கள் சிலர் சாராயத்தை டம்ளரில் ஊற்றி கொடுத்து, பீடி புகைக்க பற்ற வைத்து கொடுத்ததுள்ளநர். இதுபற்றி மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் சிவகாந்தி, தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில் காவல்துறையினர் சிறுமிக்கு சாரயத்தை ஊற்றி கொடுத்து, பீடி பற்ற வைத்து கொடுத்த அதே ஊரைச் சேர்ந்த சங்கையா (22), குமார் (21), ரமேஷ் (22), சிவராஜ் (27), ருத்ரப்பா (26), அழகப்பன் (26) ஆகிய ஆறு பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய சிவருத்ரப்பா, மல்லேஷ் ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு ஓசூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.