தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கும், நீலகிரி, கோவை, தென்காசி, தேனி, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது.
நாளை முதல் வரும் 2ம் தேதி வரையில் தமிழகம், புதுவை, காரைக்கால் போன்ற இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
தலைநகர் சென்னையில் அடுத்த 2️ நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், குறைந்தபட்சம் 26 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும், அதிகபட்சம் 34 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையும் இருக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் அழகரை எஸ்டேட்டில் அதிகபட்சமாக 14 சென்டிமீட்டர் மழை பதிவாகி இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.