மனிதனாகப் பிறந்த எல்லோருக்கும் நிச்சயம் ஏதாவது ஒரு பிரச்சனை இருக்கும். இன்னும் சொல்லப்போனால் பிரச்சனை இல்லாத மனிதனே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நாம் பிறந்ததிலிருந்து உயிரிழக்கும் வரையில் பிரச்சனை நமக்கு இருந்து கொண்டு தான் இருக்கும்.
அந்த பிரச்சனையை நேராக என்று எதிர் கொள்ள வேண்டுமே தவிர, அந்தப் பிரச்சனைக்கு பயந்து தற்கொலை செய்து கொள்வது எந்த விதத்திலும் தீர்வாகாது.அந்த வகையில், திருவள்ளூர் மாவட்டம் பட்டு கிராமத்தை சேர்ந்த கலையரசன் என்பவர் மனைவி மற்றும் தன்னுடைய நான்கு வயது குழந்தையுடன் தனியாக வசித்து வந்தார். இந்த சூழ்நிலையில் தான் நேற்று மூன்று பேரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்கள்.
4️ வயது குழந்தை காற்றிலில் பிணமாகவும் தம்பதியர் இருவரும் தூக்கிடப்பட்ட நிலையில் சடலமாகவும் கண்டெடுக்கப்பட்டு இருக்கிறார்கள். தகவல் அறிந்தது சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மூவரின் சடலத்தையும் விட்டு வேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்திருக்கிறார்கள்.அதோடு இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.