தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் அனைத்து துறைகளிலும் பல அதிரடியான மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார். அதே நேரம் பொதுமக்களின் நலனுக்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.
இந்த சூழ்நிலையில், கட்சி வேலைகளை பொறுப்போடு செய்யவில்லை என்றால் மாற்றப்படுவீர்கள் என்று மாவட்ட செயலாளர்களுக்கு தமிழக முதலமைச்சரும், திமுகவின் தலைவருமான ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இணையதளம் மூலமாக திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பேசிய முதலமைச்சர், உழைப்பவர்களுக்கு தான் கட்சியில் இடம் சுணக்கமாக இருக்கும் பணிகளை புரிதப்படுத்துங்கள். கட்சி வேலைகளை பொறுப்போடு செய்யவில்லை என்றால் மாற்றப்படுவீர்கள் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்