கடந்த ஏப்ரல் மாதம் 28ஆம் தேதி விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் கள ஆய்வில் முதல்வர் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் ஒரு சில திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதை கண்டுபிடித்த முதலமைச்சர், தேவையற்ற தவிர்க்குமாறு அதிகாரிகளுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அறிவுறுத்தினார். இத்தகைய நிலையில், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் போன்ற மாவட்டங்களில் ஊரக வளர்ச்சி, வருவாய், காவல் பள்ளிக்கல்வித்துறைகளில் பல அதிரடி பணியிட மாற்றங்கள் செய்யப்பட்டனர் இது அதிகாரிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குனர் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக எஸ். செல்வராணி நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார். அதேபோல கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக மா ராஜசேகரன் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
அதோடு விழுப்புரம் நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் பார்த்திபன் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். அதேபோன்று கள்ளக்குறிச்சி முதன்மை கல்வி அலுவலர் ஜி சரஸ்வதிக்கு பதிலாக கோ.கிருஷ்ணபிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதோடு சரியாக செயல்படாத அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதன் காரணமாக, திட்ட செயல்பாடுகள் மேலும் வேகமெடுக்கலாம் என்று தமிழக அரசு கருதுகிறது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது