ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன் 20 இவர் கரூர் காமராஜ் மார்க்கெட் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதிக்கு வந்த மேற்கு பிரதட்சனம் சாலையை சார்ந்த சண்முகசுந்தரம் 28 என்ற நபர் காளீஸ்வரன் இடம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து பறித்துச் சென்றிருக்கிறார் இது தொடர்பாக காளீஸ்வரன் வழங்கிய புகாரின் அடிப்படையில், கரூர் டவுன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சண்முகசுந்தரத்தை கைது செய்து விசாரணை நடத்தினர்.
அதேபோல இதே ஒன்று ஒரு சம்பவம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சேர்ந்தவர் திருநாவுக்கரசு( 31) இவர் தன்னுடைய நண்பரான ரங்கராஜ் என்ற நபருடன் தாந்தோணி மலையில் இருக்கின்ற ஒரு டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராயனூரைச் சேர்ந்த கொடியரசு( 22) என்ற நபர் திருநாவுக்கரசிடம் கத்தியை காட்டி, மிரட்டி அவரிடம் இருந்து ரூபாய் 200 பரித்துச்சென்றார். இது தொடர்பான புகாரினடிப்படையில் தாந்தோணி மலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொடியரசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.