fbpx

பட்டப்பகலில் வழிப்பறி செய்த இருவர் கைது….! ராமநாதபுரம் அருகே பரபரப்பு….!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தொகுதியை சேர்ந்தவர் காளீஸ்வரன் 20 இவர் கரூர் காமராஜ் மார்க்கெட் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதிக்கு வந்த மேற்கு பிரதட்சனம் சாலையை சார்ந்த சண்முகசுந்தரம் 28 என்ற நபர் காளீஸ்வரன் இடம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து பறித்துச் சென்றிருக்கிறார் இது தொடர்பாக காளீஸ்வரன் வழங்கிய புகாரின் அடிப்படையில், கரூர் டவுன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சண்முகசுந்தரத்தை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதேபோல இதே ஒன்று ஒரு சம்பவம் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சேர்ந்தவர் திருநாவுக்கரசு( 31) இவர் தன்னுடைய நண்பரான ரங்கராஜ் என்ற நபருடன் தாந்தோணி மலையில் இருக்கின்ற ஒரு டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராயனூரைச் சேர்ந்த கொடியரசு( 22) என்ற நபர் திருநாவுக்கரசிடம் கத்தியை காட்டி, மிரட்டி அவரிடம் இருந்து ரூபாய் 200 பரித்துச்சென்றார். இது தொடர்பான புகாரினடிப்படையில் தாந்தோணி மலை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொடியரசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Post

பாலியல் பலாத்காரம் திருமங்கலம் அருகே இருவர் கைது…!

Thu Jan 12 , 2023
தற்போதைய இளம் பெண்கள் மனதை மயக்கும் விதமாக இளைஞர்கள் பேசிவிட்டால் போதும் உடனடியாக அவர்களிடம் மயங்கி விடுகிறார்கள். அதன் பிறகு ஏற்படும் துன்பத்தை அவர்கள் மட்டும் அனுபவிப்பதில்லை. மாறாக அவருடைய குடும்பத்தை சார்ந்தவர்களும் சேர்ந்து அனுபவிக்கும் அவலம் ஏற்பட்டு விடுகிறது. அந்த வகையில், மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே மைக்குடியை சேர்ந்தவர் அஜித் (26) இவர் ஒரு 16 வயது சிறுமியிடம் திருமணம் செய்வதற்கு ஒரு நெருங்கி பழகி வந்தார். […]

You May Like