ஒரு முதல்வராக இல்லாமல் ஒரு தந்தையாகவே நான் அனைத்து திட்டங்களையும் வகுக்கிறேன் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அதாவது மாபெரும் தமிழ் கனவு என்ற பண்பாட்டு பரப்புரையின் 100வது நிகழ்ச்சி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடந்தது. இதில் பங்கேற்று உரையாற்றிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா இளைஞர்கள் மீது மிகப்பெரிய நம்பிக்கை கொண்டிருந்ததாக கூறியுள்ளார். அண்ணாவின் பேச்சு மாலை நேரத்து கல்லூரி போல என்றும் தமிழிலும், ஆங்கிலத்திலும் அவர் உரையாற்றியது நம்முடைய பெட்டகங்கள் என்று அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
மாநிலத்தில் தற்போது கல்வி புரட்சி நடைபெற்று வருகிறது. எனவும் நான் முதல்வராக இல்லாமல் ஒரு தந்தையாகவே அனைத்து திட்டங்களையும் வகுப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். இணையதளங்களை தேவைக்கு மட்டும் இளைஞர்கள் பயன்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.