விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில், கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதேவிக்கு தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அவர் அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் காவல் நிலையத்தில் வழங்கிய புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பத்தலுபட்டி விலக்கு பகுதியில் ஒரு ஆண் உயிர் இழந்து கிடப்பதாக வி.சொக்கலிங்கபுரம் கிராம நிர்வாக அலுவலர் சகாயராஜ் ஜீவனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அவர் நேரில் சென்று விசாரித்திருக்கிறார்.
ஆனால் உயிரிழந்து கிடந்தவர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. மேலும் சகாயராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவகாசி கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன