fbpx

விருதுநகர் அருகே இரு வேறு இடங்களில் இரு வேறு அடையாளம் தெரியாத ஆண் பிணங்கள்….! காவல்துறையினர் தீவிர விசாரணை…..!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பேருந்து நிலையத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில், கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதேவிக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் அவர் அந்த பகுதிக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் காவல் நிலையத்தில் வழங்கிய புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பத்தலுபட்டி விலக்கு பகுதியில் ஒரு ஆண் உயிர் இழந்து கிடப்பதாக வி.சொக்கலிங்கபுரம் கிராம நிர்வாக அலுவலர் சகாயராஜ் ஜீவனுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அவர் நேரில் சென்று விசாரித்திருக்கிறார்.

ஆனால் உயிரிழந்து கிடந்தவர் யார்? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. மேலும் சகாயராஜ் கொடுத்த புகாரின் அடிப்படையில் சிவகாசி கிழக்கு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன

Next Post

சென்னை மெட்ரோ நிர்வாகம்….! மாணவர்களுக்கு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!

Sun May 14 , 2023
தலைநகர் சென்னையில் பல்வேறு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இத்தகைய நிலையில், மெட்ரோ ரயில்களில் பயணம் செய்யும் கல்லூரி மாணவர்களுக்கு பாஸ் வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. மெட்ரோ ரயில் நிர்வாகம் சமீபத்தில் நடத்திய ஆய்வில், மெட்ரோ பயணிகளில் மாணவர்களின் பங்கு 40 சதவீதமாக இருக்கிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், அரசு பேருந்துகள் மற்றும் தொடர் வண்டிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மாதாந்திர இலவச பாஸ் போல […]

You May Like