fbpx

தமிழகத்தில் இந்த 14 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு…..! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட எச்சரிக்கை…..!

தமிழகத்தில் வழக்கமாக பிப்ரவரி, மார்ச் உள்ளிட்ட மாதங்களில் வெயில் தான் அதிகரித்து காணப்படும். ஆனால் இந்த வருடம் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

அந்த வகையில் தென்னிந்திய பகுதிகளின் மேல் நிலை வரும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவி வருகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இத்தகைய சூழ்நிலையில், நீலகிரி, திருப்பூர், கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் எதிர்வரும் 6 மணி நேரத்தில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Next Post

தமிழகத்தில் அதிகரித்து வரும் XBB வகை கொரோனா பரவல்.. உயிருக்கு ஆபத்தானதா?

Sat Mar 25 , 2023
2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டு முதல் படிப்படியாக குறைந்துள்ளது.. மேலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது.. அந்த வகையில் இதுவரை உருமாறிய கொரோனாவில் ஒமிக்ரான் மாறுபாடு அதிக பேரழிவை ஏற்படுத்தியது.. இந்த […]

You May Like