fbpx

என்ன நடக்கிறது பிக்பாஸ் வீட்டில்? கதறி அழுத அசீம்! கட்டி அணைத்த விக்ரமன்!

விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி 70 நாட்களைக் கடந்து ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் 21 போட்டியாளர்கள் இருந்தார்கள், ஆனால் தற்போது 70 நாட்களை கடந்துவிட்ட நிலையில், 10 போட்டியாளர்கள் மட்டுமே இந்த வீட்டில் எஞ்சி இருக்கிறார்கள்.

இந்த வீட்டில் அசின் அவர்களுக்கும், விக்ரமன் அவர்களுக்கும் பல விவகாரங்களில் கருத்து வேறுபாடுகள் மற்றும் முரண்பாடுகள் இருந்து வருகின்றன.இன்னும் சொல்லப்போனால் இவர்கள் இருவரும் இந்த வீட்டில் இரு பெரும் துருவங்களாகவே இருந்து வந்திருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில் தான் இந்த பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் வெளியேற்றப்படுவது யார் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. இந்த சூழ்நிலையில்தான் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் தங்களுடைய வாழ்க்கையில் நடைபெற்ற கசப்பான அனுபவங்களை பகிர்ந்து வருகிறார்கள். அதனை கேட்டவுடன் அசீம் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையை பற்றி நினைத்து அழ தொடங்கியுள்ளார். அப்போது விக்ரமன் தன்னுடைய பகை அனைத்தையும் மறந்து விட்டு அவரை கட்டி அணைத்து ஆறுதல் தெரிவிக்கிறார். இந்த ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Post

’எல்லாம் உன் நல்லதுக்குதான்யா பண்ணேன்’..!! மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்..!! காரணத்தை கேட்டு அதிர்ந்த போலீஸ்..!!

Wed Dec 21 , 2022
கணவரை மது போதை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பிய மனைவியை, கொடூரமாக தாக்கி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னை சூரப்பட்டு அன்னை நகரில் வசித்து வருபவர்கள் வேலாயுதம் – ரேவதி தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். வேலாயுதம் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இதனால், கடந்த 6 மாதத்திற்கு முன்பு வேலாயுதத்தை குடிபோதை மறுவாழ்வு மையத்தில் அவரது மனைவி ரேவதி சேர்த்துள்ளா. அங்கு சிகிச்சை பெற்று […]
இரவில் வாலிபருடன் தனியாக சென்ற இளம்பெண்..!! விடிந்து பார்த்தால் மரண செய்தி..!! ஷாக்கிங் சம்பவம்..!!

You May Like