fbpx

போதையில் தாக்கிய கணவரை கம்பியால் குத்தி கொலை செய்த மனைவி கைது…..! வத்தலகுண்டு அருகே பரபரப்பு….!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே தெற்கு விராலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளி வீரையன் (35) இவர் வெல்டிங் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி அபிராமி(25). இந்த தம்பதிகளுக்கு மூன்று குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில், வீரய்யன் நேற்று இரவு தன்னுடைய வீட்டின் முன்பு ரத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்தார்.

இது தொடர்பாக தகவல் அறிந்த வத்தலகுண்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதில் வீரய்யனை அவருடைய மனைவி தான் கொலை செய்தார் என்ற விவரம் தெரிய வந்தது. அபிராமியிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாகவும் மனைவியையும், குழந்தையையும் அடித்து துன்புறுத்தி இருக்கிறார் என்றும் கூறியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் தான் நேற்று முன்தினம் இரவு குடிபோதையில் வந்து அபிராமியை அவர் தாங்கி இருக்கிறார். அபிராமி அவரை திருப்பித் தாக்கியதில் வீரய்யன் நிலை தடுமாறுக்கு விழுந்தார் அப்போது வீரையனை கம்பியால் குத்தி அபிராமி கொலை செய்ததாக தகவல் கிடைத்திருக்கிறது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Next Post

பெண்களை புகைப்படம் எடுத்து மிரட்டிய பாஜகவை சேர்ந்த நபர் கைது….!

Mon May 1 , 2023
திருச்சியை சேர்ந்த ஜே பி என்ற ஜெயராம் பாண்டியன் திருச்சி மாவட்ட பாஜகவில் கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் இணைந்துள்ளார். மேலும் இவர் தான் கட்சியில் முக்கிய நிர்வாகிகள் உடன் தொடர்பில் இருப்பதாக தெரிவித்து கட்சியில் சேரும் திருமணமான பெண்களை குறி வைத்து அவர்களுடன் நெருக்கமான நண்பரை போல பழகி அவர்களுடன் புகைப்படம் எடுத்து அவர்களை மிரட்டி பணம் பறித்து வந்ததாக கூறப்படுகிறது. சென்னையைச் சார்ந்த திரைப்பட இயக்குனர் ஒருவரின் […]
இதுக்கா இப்படியொரு தண்டனை...மகனுக்கு சூடு போட்டு; கண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூர தாய்...கேரளாவில் பயங்கரம்!

You May Like