fbpx

ஓடும் ரயிலில் நள்ளிரவில் கூச்சலிட்ட பெண்…..! சி ஆர் பி எஃப் வீரர் அதிரடி கைது…..!

கர்நாடக மாநிலத்தில் இருந்து விசாகப்பட்டினம் வரையில் செல்லும் விசாகப்பட்டினம் எக்ஸ்பிரஸ் தொடர் வண்டியில் முன்பதிவு செய்த பெட்டியில் பெங்களூருவை சேர்ந்த வாசவி சவுகான்(38) தன்னுடைய 10 வயது மகளுடன் பயணம் செய்து கொண்டிருந்தார்.

இந்த நிலையில், ஜோலார்பேட்டைக்கும் காட்பாடிக்கும் இடையில் அதிகாலை 3 மணி அளவில் ரயில் சென்று கொண்டிருந்தபோது மது போதையில் பயணித்த திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்துள்ள நாயகனூர் பகுதியைச் சேர்ந்த சி.ஆர்.பி.எஃப் வீரர் சுரேஷ்(38) என்பவர் அருகில் அமர்ந்து பயணம் செய்த போது பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து சில்மிஷத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக, அதிர்ச்சிக்குள்ளான அந்த பெண் கூச்சலிட்டபடியால் சக பயணிகள் அவரை கண்டித்து இருக்கிறார்கள். இது குறித்து பயண சீட்டு பரிசோதகரிடம் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து காட்பாடி ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதன் பேரில் காட்பாடி ரயில்வே காவல்துறையினர் சுரேஷ் கைது செய்தனர். ஆனால் சம்பவம் நடைபெற்றது ஜோலார்பேட்டை ரயில்வே எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால் காட்பாடி காவல்துறையினர் ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையிடம் சிஆர்பிஎப் வீரர் சுரேஷை ஒப்படைத்தனர். அதோடு, இந்த சம்பவம் தொடர்பாக ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சுரேஷை கைது செய்திருக்கிறார்கள்

Next Post

தெருநாய்கள் கடித்து குதறியதில் 12 வயது சிறுவன் பரிதாப பலி..!! தொடரும் சோக சம்பவம்..!!

Wed May 3 , 2023
நாட்டில் சமீபகாலமாக தெருநாய்களால் கடி வாங்குபவர்களும், அதனால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அப்படி ஒரு கொடூர சம்பவம் தற்போது உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. கானா கவுந்தியா கிராமத்தில் அயான் (12) என்ற சிறுவன் தனது நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது திடீரென அங்கு தெருநாய்கள் கூடியது. இதனால் சிறுவர்கள் நாய்களுக்கு பயந்து ஓடினர். அப்போது, சிறுவன் அயான் ஓடும்போது தரையில் விழவே, தெருநாய்கள் அவன் மீது பாய்ந்து கடித்து குதறின. […]

You May Like