fbpx

இதற்கெல்லாம் காரணம் ஜோதிகா தான்….! மேடையில் உருகிய சூர்யா…..!

தமிழ் திரை உலகில் பொருத்தவரையில் பிரபலமான நட்சத்திர தம்பதிகள் என்றால் விரல் விட்டு எண்ணி விடலாம். அந்த விதத்தில் நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் தான் சூர்யா மற்றும் ஜோதிகா இவர்கள் இருவரும் ஒன்றிணைந்து சுமார் 7 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள்.

இவர்கள் இருவரும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது காதலிக்க தொடங்கினார்கள், பெற்றோர்களின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கிறார்கள். இத்தகைய நிலையில் ஒரு விருது வழங்கும் விழாவில் ஜெய் பீம் திரைப்படத்திற்கு 5 விருதுகள் கிடைத்தது. இதில் நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.

அப்போது மேடையில் விருதை வாங்கிய நடிகர் சூர்யா தன்னுடைய மனைவி ஜோதிகா தொடர்பாக உருக்கமாக பேசியிருக்கிறார் இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது, இந்த விருதை நான் ஜோதிகாவிற்கு அர்ப்பணிக்கிறேன் எனக்காக அவர் பல தியாகங்களையும் செய்து இருக்கிறார்.

குழந்தைகளை அவர் பார்த்துக் கொண்டு என்னை நடிக்க வைத்தார். எப்போதும் எனக்கு ஆதரவாக என் மனைவி இருக்கிறார் என்று சூர்யா தெரிவித்துள்ளார். அதோடு என் வாழ்வில் நடைபெறும் எல்லாவற்றிலும் ஜோதிகா ஒரு பகுதியாகவே இருக்கிறார் என்று கூறியிருக்கிறார் நடிகர் சூர்யா.

Next Post

விவசாயிகளே..!! 14-வது தவணை பணம் குறித்த புதிய அப்டேட்..!! ரூ.2 ஆயிரம் எப்போது கிடைக்கும் தெரியுமா..?

Sun Apr 23 , 2023
இந்தியாவில் 12 கோடிக்கும் அதிகமான விவசாயிகள் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் பயன் பெறுகின்றனர். இந்த திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 6,000 ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த பணம் மொத்தமாக வழங்கப்படாமல் 3 தவணைகளாக 2,000 ரூபாய் வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை விவசாயிகளுக்கு 13 தவணைத் தொகைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 14-வது தவணை தொகை பணம் எப்போது வரும் என்ற […]

You May Like