தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் 615 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 364 காவல் சார்பு ஆய்வாளர்கள் (தாலுகா) 141 காவல் சார்பு ஆய்வாளர்கள் (ஆயுதப்படை) 110 காவல் சார்பு ஆய்வாளர்கள் (சிறப்பு காவல் படை) உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளனர்.
இதற்கு ஜூன் மாதம் 1ம் தேதி முதல் 30ஆம் தேதி வரையில் இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ஊதிய விகிதத்தை பொருத்தவரையில் 36,900 முதல் 1,16,600 ரூபாய் வரையில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது அதோடு இதற்கான தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் என்று கூறப்பட்டிருக்கிறது