அஸ்ஸாமின் நல்பாரி நகரத்தின் மருத்துவக் கல்லூரியிலிருந்து ஒரு கி.மீ., தூரத்தில் உள்ள பர்தனாரா கிராமம். வயல்கள் சூழ்ந்த , நதியும் நீரும் கரை புரண்டு ஓடும் பசுமையான இடம் தான் இது. ஆனால் சரியான ரோடும், மின்சாரமும் தான் இங்கு கிடையாது. விவசாயம் செய்துகொண்டு நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வாழ்ந்து வந்த நிலையில் காலம் மாற மாற வசதிகள் எல்லாம் மற்ற கிராமங்களுக்கு வந்துள்ளது. பொறியாளர்களும், உள்ளாட்சி அதிகாரிகளும் எங்கள் கிராமத்திற்கு பலமுறை வந்தும், சாலை அமைக்க நிலத்தை அளந்தும், துரதிர்ஷ்டவசமாக, சாலை அமைக்க வில்லை. மின்சார இணைப்பும் வந்து சேரவில்லை.
அதனால் குடும்பங்கள் நகர ஆரம்பித்தது. ஆனால் குடும்பத் தலைவரான தேகா, கடந்த 40 ஆண்டுகளாக இந்த தனிமைப்படுத்தப்பட்ட கிராமத்தில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வருகிறார். குடும்பத்தில் தேகாவின் மனைவி அனிமா மற்றும் நரேன், திபாலி மற்றும் சூட்டி என்ற மூன்று குழந்தைகள் உள்ளனர். நல்பாரியின் கோக்ராபார் வட்டத்தின் கீழ் உள்ள இந்த கிராமத்தில் பிமல் தேகாவின் குடும்பம் தனித்து வாழ்ந்து விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் மட்டும் இந்த கிராமத்தை விட்டு வெளியேறாத காரணம் கேட்டால், ‘இடமாற்றம் செய்வதற்கு என்னிடம் ஆதாரங்கள் இல்லாததால் என்னால் செல்ல முடியவில்லை.
எங்கள் கிராமத்தில் சாலைகள் எதுவும் இல்லை. மழைக்காலத்தில், படகில் பயணிப்போம், வறட்சியான நேரங்களில் பள்ளிக்கு நடந்து செல்வோம். பாதியில் சைக்கிள் ஓட்டிவிட்டுப் பள்ளிக்கு படகு சவாரி செய்கிறேன். ” என்று கூறுகின்றனர், நல்பாரியில் இருந்து சுமார் 12 கிமீ தொலைவில் உள்ள இந்த கிராமம் 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் 16 பேரோடு இருந்துள்ளது. இப்பொது வெறும் 5 பேருடன் இருக்கிறது. அரசு தரப்பில் இருந்து கிடைக்கும் ஒரே நலத்திட்டம் அருணோத்யா(Orunodoi) திட்டம். குடும்ப தலைவிக்கு மாதம் 1000 கொடுக்கும் அசாம் அரசு திட்டத்தில் தான் குடும்பம் அடிப்படைத் தேவைகளை தீர்த்துவருகிறது.
“நான் விவசாய நிலங்களிலும், கால்நடைகளிலும் விவசாயம் செய்கிறேன். இதுதான் எங்களின் ஒரே வருமானம். சில சமயங்களில் நான் வெறிச்சோடியதாக உணர்கிறேன், ஆனால் ஒரு சாலை வந்தால் இந்த கிராமம் அதன் கடந்த காலப் பெருமையை மீண்டும் பெற முடியும் என்று நான் உண்மையாக நம்புகிறேன்” என்று பிமல் தேகா கூறினார்.