வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது..
ரெப்போ என்பது வங்கிகளுக்கு தேவைப்படும் போது ரிசர்வ் வங்கி கடன் வழங்கும் விகிதமாகும். பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி மேற்கொள்ளும் நடவடிக்கையாகும்.. ரிவர்ஸ் ரெப்போ ரேட் என்பது ரிசர்வ் வங்கி வங்கிகளிடம் இருந்து பெறும் கடன் விகிதம் ஆகும்..
இந்நிலையில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் 6.5 சதவீதமாகவே நீடிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்..
மும்பையில் நடைபெற்ற 3 நாள் நிதிக்கொள்கை கூட்டத்தின் முடிவில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பொருளாதார வளர்ச்சியை பாதிக்கலாம் என்பதால் வட்டியை உயர்த்தவில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்துள்ளார்.. ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்படாததால் வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதத்தில் மாற்றமிருக்காது
கடந்த ஆண்டு முதல் 6 முறை ரெப்போ வட்டி விகிதம் உயர்த்தப்பட்டது.. அதன்படி 2022 மே மாதம் முதல் இதுவரை 2.50% வரை கடன்களுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்பட்டுள்ளது.. 7-வது முறையாக தற்போது மீண்டும் வட்டி உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது..