fbpx

தமிழகமே… இன்று எந்த ஒரு பள்ளிகளும் இயங்காது…! தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் அறிவிப்பு…! இது தான் காரணம்…

கள்ளக்குறிச்சியில் சக்தி மெட்ரிக் பள்ளியின் மீது தாக்குதல் நடைபெற்ற நிலையில், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நாளை முதல் மெட்ரிக், CBSE பள்ளிகள் இயங்காது என்று தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் நந்தகுமார் அறிவிப்பு

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தனியார் பள்ளி சங்கத்தின் இளங்கோவன்; கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு பயின்ற மாணவி ஸ்ரீமதியின் தற்கொலை அதிர்ச்சிகரமானது. இது தொடர்பான அரசு விசாரணையின் முடிவில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். இந்த நிலையில், கள்ளக்குறிச்சி பள்ளியில் நடந்த துயரமான சூழலைப் பயன்படுத்தி அந்தப் பள்ளியில் பயிலும் 3,500 மாணவர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான ஆசிரியர்களின் சான்றிதழ்களை அழித்ததும், பள்ளி வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தியதும், பள்ளி உடைமைகளை கொள்ளையடித்துச் சென்றதும் மன்னிக்க முடியாத சமூக விரோதச் செயல்.

இது போன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் எந்த நிறுவனத்திலும் நடைபெறாத வண்ணம், தமிழ்நாடு அரசு பாதுகாப்பு விதிகளை உருவாக்கி அரசாணை பிறப்பித்திட வேண்டும். இது குறித்து தமிழ்நாட்டிலுள்ள உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் இன்று தனியார் பள்ளி நிர்வாகிகளும், தனியார் பள்ளி பெற்றோர் சங்கங்களும் சேர்ந்து மனு அளிக்க உள்ளதாகவும்,. இதனால் இன்று தமிழ்நாடு முழுவதும் தனியார் பள்ளிகள் செயல்படாது என தெரிவித்துள்ளார். அதே போல கள்ளக்குறிச்சியில் சக்தி மெட்ரிக் பள்ளியின் மீது தாக்குதல் நடைபெற்ற நிலையில், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இன்று முதல் மெட்ரிக், CBSE பள்ளிகள் இயங்காது என்று தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் நந்தகுமாரும் அறிவித்துள்ளார்.

Also Read: “சூப்பர் நியூஸ்” தொழில் நிறுவனங்கள் QR கோட் வாயிலாக வெளியிடுவதை அனுமதித்த மத்திய அரசு…..!

Vignesh

Next Post

மக்களே... இந்த அறிகுறி இருந்தா நீங்க உடனே மருத்துவர்களை போய் பாருங்க...! கொரோனாவில் இருந்த முதல்வர் கடிதம்...!

Mon Jul 18 , 2022
இருமல், சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் எழுதி உள்ள கடிதத்தில்; கொரோனா தொற்றினால் நான் பாதிக்கப்பட்ட செய்தி அறிந்ததிலிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் என்னைத் தொடர்பு கொண்டும், கடிதம் எழுதியும் நலம் பெற வேண்டும் என்று நெஞ்சார வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். நலமடைந்துவிட்டேன் என்ற நல்லசெய்தியுடன் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் […]
தமிழகத்தில் வேகமாக பரவும் கொரோனா..! ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவுபோட்ட முதல்வர்..! மக்களே உஷார்

You May Like