fbpx

”இன்னைக்கு நைட் யாரும் இந்த ஊருக்கு போக முடியாது”..!! பேருந்துகள் நிறுத்தம்..!! பயணிகள் அவதி..!!

சென்னை – பெங்களூரு செல்லும் பேருந்துகள் இன்று இரவு 8 மணி முதல் நிறுத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காவிரி நதி நீர் பங்கீடு தொடர்பாக தமிழ்நாடு – கர்நாடகா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. காவிரி நீரை திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் தமிழ்நாட்டிற்கு 15 நாட்களுக்கு தினமும் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கும்படி கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது. ஆனால், இதை ஏற்க கர்நாடகா மறுத்துவிட்டது.

இந்நிலையில், மண்டியாவில் விவசாயிகள், கன்னட அமைப்புகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் தமிழ்நாடு-கர்நாடகா இடையே பெரும் பதற்றம் நிலவி வருகிறது. காவிரி பிரச்சனை தொடர்பாக நாளை பெங்களூரில் முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறவுள்ளது. காலை 9 மணிக்கு தொடங்கும் இந்த பந்த், மாலை 6 மணிக்கு முடிவடையும். இந்நிலையில், தமிழர்களின் உடைமைகள் பாதிக்கப்படும் என்பதால் பெங்களூரு செல்லும் தமிழக லாரிகளை எல்லையிலேயே நிறுத்த லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் பேருந்துகள் இன்று இரவு 8 மணி முதல் எல்லையிலேயே நிறுத்தப்படும் என தெரிகிறது. நாளை மாலை 6 மணிக்கு மேல் சூழலுக்கேற்ப மீண்டும் பேருந்துகள் இயக்கம் குறித்து முடிவு செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Chella

Next Post

”உங்களுக்கும் கண்டிப்பா இந்த பழக்கம் இருக்கும்”..!! ”ஆனா இனி விட்ருங்க”..!! ”பெரிய ஆபத்து காத்திருக்கு”..!!

Mon Sep 25 , 2023
காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்ய பலரும் இயர்பட்ஸ் பயன்படுத்துவோம். சிலரோ தினமும் ஒரு முறையாவது பயன்படுத்துவார்கள். ஆனால், காதில் இயர்பட்ஸ்களை பயன்படுத்துவது ஆபத்தானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். அதாவது, உங்கள் காதுகளின் வெளிப்புற பகுதியை சுத்தம் செய்ய மட்டும் பட்ஸை பயன்படுத்தினால் போதும். காதின் உட்புறத்திற்கு பட்ஸ் பயன்படுத்தக் கூடாது என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். காதுகளுக்குள் உருவாகும் மெழுகு காதின் பாதுகாப்பிற்கு முக்கியமானது. இது தூசி, நுண்ணுயிரிகளை காதுக்குள் […]

You May Like