fbpx

பெரும் சோகம்…! பேஷன் ஷோ நிகழ்ச்சியின் போது இளம் மாடல் அழகி உயிரிழப்பு…!

பேஷன் ஷோ நிகழ்ச்சியின் போது வன்ஷிகா சோப்ரா என்னும் இளம் மாடல் அழகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நொய்டாவின் பிலிம் சிட்டி பகுதியில் நேற்று பேஷன் ஷோ நிகழ்ச்சியின் போது இளம் மாடல் அழகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேஷன் ஷோ நிகழ்ச்சியின் போது இரும்புத் தூண்கள் சரிந்து வன்ஷிகா சோப்ரா மற்றும் பாபி ராஜ் ஆகியோர் மீது விழுந்ததில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

வன்ஷிகா மற்றும் பாபி ராஜ் இருவரும் அருகில் உள்ள கைலாஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வன்ஷிகா சோப்ரா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் மற்றொருவருக்கு தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உள்ளூர் போலீசார் நிகழ்ச்சி நடத்திய 4 பேரையும் கைது செய்தனர்.

Vignesh

Next Post

நாணயம் பயன்படுத்தும் நபர்களே கவனம்...! அதில் உள்ள குறியீடு பின்னணி என்ன...? விவரம் உள்ளே...

Mon Jun 12 , 2023
நாம் தினசரி பயன்படுத்தும் நாணயங்களில் உள்ள குறியீடுகளை வைத்து அவை எங்கு அச்சிடப்படுகின்றன என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்தியாவில் உள்ள நாணயங்கள் நான்கு அச்சகங்கள் அச்சிடுகின்றன. அதன் படி, மத்தியப் பிரதேச மாநிலத்தின் தேவாஸ் பகுதியிலும், மகாராஷ்டிராவில் நாசிக், கர்நாடகாவில் மைசூர் மற்றும் மேற்கு வங்காளத்தில் சல்போனி ஆகிய இடங்களில் அச்சடிக்கப்படுகின்றன. தேவாஸ் மற்றும் நாசிக் அச்சகங்கள் செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவிற்கு சொந்தமானது, இது […]

You May Like