பேஷன் ஷோ நிகழ்ச்சியின் போது வன்ஷிகா சோப்ரா என்னும் இளம் மாடல் அழகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நொய்டாவின் பிலிம் சிட்டி பகுதியில் நேற்று பேஷன் ஷோ நிகழ்ச்சியின் போது இளம் மாடல் அழகி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேஷன் ஷோ நிகழ்ச்சியின் போது இரும்புத் தூண்கள் சரிந்து வன்ஷிகா சோப்ரா மற்றும் பாபி ராஜ் ஆகியோர் மீது விழுந்ததில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
வன்ஷிகா மற்றும் பாபி ராஜ் இருவரும் அருகில் உள்ள கைலாஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வன்ஷிகா சோப்ரா சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார் மற்றொருவருக்கு தீவிரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த உள்ளூர் போலீசார் நிகழ்ச்சி நடத்திய 4 பேரையும் கைது செய்தனர்.