fbpx

“ பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காதது கொடுமை ஆகாது..” குடும்ப வன்முறை மனுவை தள்ளுபடி செய்த நீதிமன்றம்

குடும்ப வன்முறை மற்றும் மனைவியை தற்கொலைக்கு தூண்டுதல் ஆகிய குற்றச்சாட்டுகளில் இருந்து கணவர் மற்றும் அவரது உறவினர்களை மும்பை நீதிமன்றம் விடுவித்துள்ளது.. மேலும் ஒரு பெண்ணுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்காதது அவள் கொடுமைக்கு ஆளானதாக அர்த்தமல்ல என்றும் தெரிவித்துள்ளது…

கடந்த 2011 அன்று மும்பையை சேர்ந்த திருமணமான பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.. இதை தொடர்ந்து 2012-ம் ஆண்டில், அப்பெண்ணின் கணவர் மற்றும் அவரின் குடும்பத்தினர் மீது உயிரிழந்த பெண்ணின் மாமா புகாரளித்திருந்தார்.. அந்த புகாரில், பெண் குழந்தை பெற்றதால், மாமியார் அந்தப் பெண்ணை தாக்கி துன்புறுத்தியதாகவும், கர்ப்பத்திற்குப் பிறகு பலவீனமான நிலையில் இருந்தபோதிலும், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவில்லை என்றும் குற்றம் சாட்டி இருந்தார்…

மேலும், அப்பெண்ணின் மாமியார் தங்கம், தொலைக்காட்சி பெட்டி, குளிர்சாதன பெட்டி மற்றும் 40 புடவைகள் உள்ளிட்டவற்றை வரதட்சணையாக வாங்கியதாகவும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்த பிறகு, மீண்டும் வரதட்சணை கேட்டதாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுதொடர்பான வழக்கை விசாரித்த மும்பை நீதிமன்றம், குடும்ப வன்முறை மற்றும் தனது மனைவி தற்கொலைக்கு தூண்டியதாக குற்றச்சாட்டப்பட்ட கணவர் உள்ளிட்ட அவரின் உறவினர்கள் 4 பேரையும் விடுவித்தது.. மேலும், பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களின் சாட்சியங்கள் தெளிவாக இல்லை என்று கூறிய நீதிமன்றம், வரதட்சணை வாங்கியதற்கான ஆதாரம் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் கூறியது.

மேலும் “முழு ஆதாரங்களையும் ஆய்வு செய்ததில், பாதிக்கப்பட்டவரின் தாய், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக தெளிவற்ற மற்றும் பொதுவான குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாகத் தெரிகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் இறந்தவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லவில்லை என்பது முக்கிய குறை. இந்த முக்கிய குறையை கொடுமை என்று கூற முடியாது, அது தற்கொலைக்கு வழிவகுத்தது.. மருத்துவ சிகிச்சை அளிக்காததை ‘தவறான சிகிச்சை’ என்று கூற முடியாது என்றும் தெரிவித்தது.. பாதிக்கப்பட்ட பெண்ணோ அல்லது அவரது குடும்பத்தினரோ அவர் உயிருடன் இருந்தபோது குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக புகார் எதுவும் அளிக்கவில்லை என்றும் கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது..

Maha

Next Post

ஆங்கிலம் தெரியவில்லையா?... கணினி, செல்போனில் இனிமேல் Translate ரொம்ப ஈஸி!... வழிமுறைகள் இதோ!

Tue Feb 21 , 2023
கணினியில் ஃபயர்பாக்ஸ் பிரவுசரை பயன்படுத்தி எளிய முறையில் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு Translate செய்யும் முறை குறித்து இந்த தொகுப்பில் அறிந்துக்கொள்வோம். கணினியில் ஃபயர்பாக்ஸ் பிரவுசர் பயன்படுத்தினால், மொழிபெயர்ப்பு எக்ஸ்டென்ஷனை பதிவிறக்கம் செய்து, விரும்பும் இணையப் பக்கத்தை முழுமையாக தமிழில் வாசிக்க முடியும். அந்தவகையில், முதலில் ஃபயர்பாக்ஸ் அப்ளிகேஷனை கணினியில் திறந்ததும், அதன் வலது மூளையில் மூன்று கோடுகள் அடுக்கப்பட்டிருக்கும். அது அப்ளிகேஷன் மெனு. அதனை க்ளிக் செய்தால், பட்டியல் […]

You May Like