fbpx

கவலைக்குரிய விஷயம்… உடனே நடவடிக்கை வேண்டும்…! முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஓபிஎஸ் முக்கிய வேண்டுகோள்…!

தரமற்ற உணவுகளைத் தயாரிக்கும் உணவகங்களை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது குறித்து ஒரு வெளியிட்ட அறிக்கையில்; இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களுக்கும் மனிதப் பிறவி விழுமியது. அரிதாய் பெற்ற மனிதப் பிறவியைப் போற்றிப் பாதுகாக்க வேண்டுமென்றால், நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தைப் பெற வேண்டுமென்றால், சுற்றுப்புறம் சுகாதாரமாக இருப்பதோடு, தரமான உணவும், பாதுகாக்கப்பட்ட குடிநீரும் உறுதி செய்யப்பட வேண்டும். தற்போது உணவுப் பாதுகாப்பு கேள்விக்குறி ஆக்கப்பட்டுள்ளது மக்களிடையே பெருத்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.,ஹபாதிப்புகல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக, வெளிநாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும், கிராமப்புறங்களிலிருந்தும் சென்னைக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவ்வாறு வருபவர்கள் அனைவரும், சென்னையில் உள்ள உணவகங்களை நம்பித்தான் உள்ளனர்‌. இதற்கேற்ப உணவகங்களின் எண்ணிக்கையும், உணவு விடுதிகளும், நடமாடும் உணவகங்களும் பெருகிக் கொண்டே வருகின்றன. பெரும்பாலான சைவ மற்றும் அசைவ உணவகங்களில் தரமற்ற உணவு விநியோகிக்கப்படுவதாகக் கூறப்பட்டு வந்த நிலையில், உணவுப் பாதுகாப்புத் துறையினரின் ஆய்வு அதனை உறுதிப்படுத்தியுள்ளது.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்காக, வெளிநாடுகளிலிருந்தும், வெளி மாநிலங்களிலிருந்தும், கிராமப்புறங்களிலிருந்தும் சென்னைக்கு வருவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இவ்வாறு வருபவர்கள் அனைவரும், சென்னையில் உள்ள உணவகங்களை நம்பித்தான் உள்ளனர். இதற்கேற்ப உணவகங்களின் எண்ணிக்கையும், உணவு விடுதிகளும், நடமாடும் உணவகங்களும் பெருகிக் கொண்டே வருகின்றன.

இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், சென்னையில் உள்ள அனைத்து உணவகங்களிலும் காலமுறை மேற்கொள்ளும் அளவுக்கு பணியாளர்கள், வாகன வசதிகள் மற்றும் இதர வசதிகள் இல்லை என்றும், உணவகங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவுப் பாதுகாப்புத் துறை மேம்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கின்றன. சுகாதாரமற்ற உணவுகளைத் தயாரிக்கும் உணவகங்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுத்தால் மட்டுமே இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண முடியும் என தெரிவித்துள்ளார்.

Vignesh

Next Post

யாராலும் திறக்க முடியாத மர்மக் கதவு.. பல ஆயிரம் ஆண்டுகளாக தொடரும் மர்மம்..

Mon Aug 22 , 2022
உலகில் பல மர்மமான இடங்கள் உள்ளன.. அந்த இடங்களை பற்றி பல்வேறு ஆச்சர்யமான தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன.. அந்த வகையில் இன்று ஒரு மர்மமான கதவைப் பற்றி பார்க்கலாம். இந்த மர்மக் கதவு பீகாரில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ராஜ்கிரில் உள்ள ஒரு குகைக்குள் அமைந்துள்ளது. இன்று வரை இந்தக் கதவை யாராலும் திறக்க முடியவில்லை. இந்தக் கதவுக்குப் பின்னால் தங்கப் புதையல் இருப்பதாகக் கூறப்படுகிறது. பல […]

You May Like