fbpx

பரபரப்பு…! ஜல்லிக்கட்டு போட்டிக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு…!

ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு மீது பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றம் மனு தாக்கல் தாக்கல் செய்ததன் விளைவாக பாரம்பரியமான ஜல்லிக்கட்டு விளையாட்டு இருக்கு நீதிமன்றம் தடை ஆணை பிறப்பித்தது. இந்தத் தடை உத்தரவை நீக்க கோரி பல்வேறு அமைப்புகள் தொடர்ச்சியாக அலங்காநல்லூர் மெரினா கடற்கரை உடைத்த பல இடங்களில் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து ஜல்லிக்கட்டு சட்டமாக்கப்பட்டு உச்சநீதிமன்றம் பிறப்பித்த தடை உத்தரவை நீக்கியது. இதன் பிறகு ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்று வந்தது.

ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்யக்கோரி பீட்டா உள்ளிட்ட 15 அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. இந்த மனுக்கள் மீதான அனைத்து விசாரணைகளும் முடிவடைந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு எதிரான வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளது. நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கும் தீர்ப்பு எப்படி அமையப் போகிறது என்று அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Vignesh

Next Post

கள்ளச்சாரயம் அருந்தி உயிரிழப்பு..! தமிழக அரசிடம் விளக்கம் கேட்ட ஆளுநர் ஆர்.என். ரவி...!

Thu May 18 , 2023
கள்ளச்சாரயம் அருந்தி உயிரிழப்பு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக தமிழக அரசிடம் ஆளுநர் ஆர்.என். ரவி விரிவாக விளக்கம் கேட்டுள்ளார். விழுப்புரம்‌ மாவட்டம் மரக்காணம்‌ அருகே கள்ளச்சாராயம்‌ அருந்தியதால்‌ இதுவரை 22 பேர்‌ உயிரிழந்துள்ளனர்‌. மேலும்‌, 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்‌ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்‌. இந்த கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பாக பேசப்பட்ட வருகிறது. கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின்‌ குடும்பங்களுக்கு 10 லட்சம்‌ ரூபாய்‌, சிகிச்சை […]

You May Like