fbpx

என்ன நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் இவருக்கும் தொடர்பு இருக்கிறதா…..? முக்கிய நபரை கொத்தாக தூக்கிய என்.ஐ.ஏ அதிகாரிகள்……!

கடந்த 2022 ஆம் வருடம் அக்டோபர் மாதம் 23ஆம் தேதி கோவை உக்கடம் அருகே இருக்கின்ற கோட்டை ஈஸ்வரன் ஆலயத்தின் முன்பு நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது.

இந்த சம்பவம் குறித்து பாஜகவின் தேசிய தலைமை முதல் மாநில தலைமை வரையில் பல்வேறு நபர்களும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வந்தனர். அதோடு, கடுமையான கண்டனங்களையும் பதிவு செய்திருந்தார்கள். மேலும் இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தடை செய்யப்பட்ட ஐஎஸ் தீவிரவாத இயக்கத்தில் தொடர்புள்ள ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய தமிழக காவல்துறையினர், இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புள்ள 5 பேரை கைது செய்தனர். ஆகவே இந்த வழக்கு திடீரென்று தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. அதாவது, தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்தில் தொடர்புள்ள ஒருவரால் இந்த வெடிகுண்டு விபத்து நடத்தப்பட்டுள்ளது என்பதால் மத்திய அரசு இதில் தனி கவனம் செலுத்தியது.

இதனைத் தொடர்ந்து, இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 11 பேரை கைது செய்தது தேசிய புலனாய்வு முகமை, மேலும் அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருகின்றது. இத்தகைய நிலையில் தான், இந்த வழக்கில் மேலும் ஒரு நபரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்திருக்கிறது.

இந்த வெடிகுண்டு விபத்தில் பலியான ஜமிஷா முபினின் நெருங்கிய நண்பரான முஹம்மத் இத்ரீஸ் என்பவர் தேசிய திறனாய்வு முகமை அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்து வந்தார். இத்தகைய நிலையில் தான், இந்த குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், முகமது இத்ரீஸை நேற்று மாலை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்து இருக்கிறார்கள்.

அவருடைய கைபேசியிலிருந்து சென்ற 3 வருடங்களில் அவர் பேசிய தொடர்புகளையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில்தான், கோவையில் கைது செய்யப்பட்ட முகமது இத்ரீஸை இன்று சென்னை பூந்தமல்லி நீதிமன்றத்தில் தேசிய பலனாய்வு முகமை அதிகாரிகள் ஆஜர்ப்படுத்தி சிறையிலடைக்க இருக்கிறார்கள். ஆனால் அவரை தனியாக விசாரிப்பதற்கு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அனுமதி கேட்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Next Post

இலவச திட்டங்களால் சிக்கித் தவிக்கும் அரசு..!! அத்தியாவசிய பொருட்களின் விலை அதிரடி உயர்வு..!! அடுத்தது தமிழ்நாடு..?

Wed Aug 2 , 2023
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததை தொடர்ந்து இல்லத்தரசிகளுக்கு ரூ. 2 ஆயிரம், பட்டதாரிகளுக்கு ரூ.3 ஆயிரம், டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1500, பெண்களுக்கு பேருந்தில் இலவசம், மாதந்தோறும் 10 கிலோ அரிசி, 200 யூனிட் மின்சாரம் ஆகிய 5 இலவச திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. இதற்காக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.56 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது. இதனால் கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், அடிப்படை கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய […]

You May Like