fbpx

ஆலந்தூர் மெட்ரோ மேம்பாலத்தில் சாலை வழிகாட்டி பெயர் பலகை சரிந்து விழுந்து ஒருவர் பலி..!

சென்னை, ஆலந்தூர் மெட்ரோ அருகே மேம்பாலத்தில் உள்ள சாலை வழிகாட்டி பலகை பெயர்ந்து விழுந்ததால் ‌பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த மாநகர பேருந்து, வேன், ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள் மீது பெயர் பலகை விழுந்துள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்த இரண்டு பேருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் ஆலந்தூர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Rupa

Next Post

உங்களின் அடுத்தக்கட்ட திட்டம் என்ன? ஜெயிலர் பட ஷூட்டிங் எப்போது? - ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி

Sun Aug 7 , 2022
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக டெல்லி சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை திரும்பினார். அண்ணாத்த படத்தை தொடர்ந்து ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடிக்கவுள்ளார். பீஸ்ட் படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் ஜெயிலர் படத்தை இயக்குகிறார். இதற்கான ப்ரி புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் ரஜினியுடன் கன்னட நட்சத்திரம் சிவக்குமார், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் […]

You May Like