fbpx

இந்த விநாயகர் சிலைகளை மட்டுமே நீரில் கரைக்க வேண்டும்.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு…

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகளை நீரில் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை வரும் 31-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.. இதனை முன்னிட்டு தங்கள் வீடுகளிலும், தெருக்களிலும் விநாயகர் சிலைகளை வைத்து பொதுமக்கள் வழிபடுவார்கள்.. மேலும் விநாயகர் சதுர்த்தியில் இருந்து 3 அல்லது 5 நாட்களில் ஊர்வலமாக எடுத்து சென்று சிலைகளை நீர் நிலைகளில் கலப்பது வழக்கம்.. எனினும் இவ்வாறு நீர்நிலைகளில் விநாயகர் சிலைகளை கரைப்பதால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது..

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலைகளை நீரில் கரைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.. அதன்படி “ களிமண்ணால் செய்த, பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ், பிளாஸ்டிக் கலக்காத விநாயகர் சிலைகளை மட்டுமே கரைக்க வேண்டும்.. மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள இடங்களில் மட்டும் சிலைகளை கரைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டாம்..

சிலைகளின் ஆபரணங்களை தயாரிக்க உலர்ந்த மலர்கள், வைக்கோல் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.. சிலைகளுக்கு வர்ணம் பூச நச்சு மற்றும் மக்காத ரசாயன சாய, வண்ணப்பூச்சுகளை பயன்படுத்த கூடாது..” என்று தெரிவித்துள்ளது.. விநாயகர் சதுர்த்தி விழாவை சுற்றுச்சூழல் பாதிக்காதவாறு கொண்டாட மாசு கட்டுப்பாட்டு வாரியம் கோரிக்கை விடுத்துள்ளது..

Maha

Next Post

மின் கசிவால் தீ விபத்து; வீட்டின் உள்ளேயே உடல் கருகி வாலிபர் சாவு..!

Sat Aug 20 , 2022
கோபி அருகே உள்ள கூலை மூப்பனூரை சேர்ந்தவர் அர்ஜூன்(34). பி.ஏ.பட்டதாரியான இவர் கூலி வேலை செய்து வந்தார். அர்ஜூன் சிமெண்ட் சீட்டால் ஆன இரண்டு வீட்டில் மனைவி குழந்தைகளுடன் வசித்து வந்தார். நேற்று இரவு தனது இரண்டாவது மகன் விவினை அதே பகுதியில் இருக்கும் தாயார் கனகராணியின் வீட்டில் விட்டு விட்டு தனது வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு ஒரு வீட்டில் மனைவி கஸ்தூரியும், மூத்த மகன் யஸ்வந்த்தும் தூங்கி கொண்டிருந்தனர். […]
நீண்ட நாள் பகையை தீர்த்த குடும்பம்..! இளம்பெண்ணை உயிரோடு எரித்துக் கொன்ற கொடூரம்..!

You May Like