fbpx

எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ் அதிரடி நீக்கம்..! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை அதிரடியாக நீக்கி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

தமிழக சட்டசபையில் ஓ.பன்னீர்செல்வம் வகித்து வரும் எதிர்க்கட்சி துணைத் தலைவர் என்ற பதவியையும் பறித்து கட்சியில் மட்டுமல்லாமல் சட்டசபையிலும் அவரது அந்தஸ்தை இழக்க வைத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்களை தன்வசம் வைத்துள்ள எடப்பாடிக்கு ஆதரவாக 62 எம்.எல்.ஏ.க்களும், ஓபிஎஸ் அணியில் அவரையும் சேர்த்து 3 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருக்கிறார்கள். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான அடுத்தக்கட்ட அதிரடி நடவடிக்கையை எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ளார்.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ் அதிரடி நீக்கம்..! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அதாவது கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தின் சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியையும் பறித்துள்ளார். எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம், சென்னை, ஆழ்வார்பேட்டை, பார்க் ஓட்டலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடைக்கால பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற கட்சி துணைத் தலைவராக திருமங்கலம் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை செயலாளராக போளூர் தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி தேர்வு செய்யப்பட்டுள்ளார்” என்று கூறப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ் அதிரடி நீக்கம்..! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

இதற்கான பரிந்துரை கடிதத்தை சபாநாயகருக்கு இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அனுப்பி உள்ளார். இதற்கிடையே, ஓ.பன்னீர்செல்வம் தரப்பிலும் சபாநாயகரிடம் ஒரு மனு அளிக்கப்பட்டுள்ளது. அதில், “சட்டமன்ற குழுவை மாற்றி அமைக்கும் படி மனுக்கள் வந்தால் அவற்றை நிராகரிக்க வேண்டும். அதிமுக பொதுக்குழு தொடர்பாக நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மனுக்களை நிராகரிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் கூறுகையில், ”பொதுக்குழு தொடர்பான வழக்குக்கும் சட்டமன்ற குழுவை மாற்றி அமைப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சட்டமன்றத்தை பொறுத்தவரை சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் தான் பதவிக்கு தேர்வு செய்யப்படுவார்கள். தற்போதைய நிலையில் 63 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். எனவே, யாரை தேர்வு செய்வது, யாரை நீக்குவது என்பதை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான குழுவினர்தான் முடிவு செய்வார்கள். அதில் எந்த பிரச்சினையும் வராது” என்றனர்.

Chella

Next Post

கள்ளக்குறிச்சி விவகாரம்..! கனியாமூர் தேர்வு மையம் மாற்றம்..! டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவிப்பு

Tue Jul 19 , 2022
டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்காக கனியாமூரில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் 24ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி குரூப்- 4 தேர்வு நடைபெற இருக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. அதில், 1,200 தேர்வர்களுக்கு கள்ளக்குறிச்சியில் உள்ள கனியாமூர் பள்ளி, தேர்வு மையமாக ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அந்த பள்ளியை மாற்றம் செய்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் வன்முறை […]
அதிகரிக்கும் குரூப் 4 காலியிடங்கள்..!! கட் ஆஃப் மதிப்பெண்களில் அதிரடி மாற்றம்..!! வெளியான முக்கிய தகவல்..!!

You May Like