பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபல சமூக ஆர்வலர் பிரபாபென் சோபாக்சந்த் ஷா காலமானார் .
பத்மஸ்ரீ விருது பெற்ற பிரபாபென் சோபாக்சந்த் ஷா தனது 92வது வயதில் காலமானார். பிரபாபென் சோபாக்சந்த் ஷா தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு சமூக சேவகர் ஆவார். இவர் “தாமன் கி திவ்யா” என்றும் அழைக்கப்படுகிறார்.
ஏழை எளிய மக்கள் உணவு உட்கொள்ள கேன்டீன்களை ஏற்பாடு செய்துள்ளார் மற்றும் குஜராத் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அகில இந்திய மகளிர் கவுன்சிலின் “வட்டா வங்கிகளை” ஒருங்கிணைத்து உதவிக்கரம் நீட்டிய பெருமைக்கு சொந்தக்காரர். 2022 ஆம் ஆண்டில், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூவில் சமூகப் பணிக்காக இந்தியாவின் 4 வது உயரிய சிவிலியன் விருதான பத்மஸ்ரீ விருதை பிரபாபென் சோபாக்சந்த் ஷா பெற்றார்.