fbpx

“கட்சி உறுப்பினர் நம்பிக்கையை பெற முடியாதவர்கள்…” ஓபிஎஸ்-க்கு உயர்நீதிமன்றம் கண்டனம்..

இன்று நடைபெற அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.. இந்த வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பொதுக்குழு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.. பெரும்பான்மை பொதுக்குழு உறுப்பினர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதால் கட்சி விதிகளுக்கு உட்பட்டு பொதுக்குழு நடத்த அனுமதி வழங்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.. மேலும், பொதுக்குழு நடத்த தடை கேட்ட ஓபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்..

தொடர்ந்து ஓபிஎஸ்-க்கு கண்டனம் தெரிவித்த நீதிபதி “ கட்சி உறுப்பினர் நம்பிக்கையை பெற முடியாதவர்கள் நீதிமன்றங்களை ஒரு கருவியாக பயன்படுத்துகின்றனர்.. நீதிமன்றத்தின் மூலம் தாங்கள் நினைத்ததை சாதிக்க முயற்சிக்கின்றனர்.. ஜனநாயகத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பம் தான் மேலோங்கி இருக்கும். ஒருங்கிணைப்பாளர் என்பவர் கட்சி நலன், வளர்ச்சிக்கு ஏற்றவாறு உறுப்பினர்களை சமாதானம் செய்ய வேண்டும்.. பொதுக்குழுவில் தீர்வு கிடைக்காவிடில் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம்..

சிறந்த நிர்வாகத்துக்காக கட்சி விதிகளை வகுக்கும் விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட முடியாது.. சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடத்தவில்லை உச்சநீதிமன்றம் தான் பரிசீலிக்க முடியும்..” என்று தெரிவித்தார்….

இதனிடையே உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து, வானகரத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெற்று வருகிறது.. இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. மேலும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. மேலும் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதியும் ரத்து செய்யப்பட்டது.. 4 மாதங்களுக்குள் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

Maha

Next Post

இனி எல்லா அதிகாரங்களும் இபிஎஸ்-க்கு தான்... அதிமுக சட்ட விதிகளில் முக்கிய மாற்றம்...

Mon Jul 11 , 2022
அதிமுக பொதுக்குழு நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ள நிலையில் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.. இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற இரட்டை தலைமையை ரத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. மேலும், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. மேலும் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்ற விதியும் ரத்து செய்யப்பட்டது.. 4 […]

You May Like