fbpx

பக்ரீத் பண்டிகை தமிழக மக்களே சொந்த ஊருக்கு போக ரெடியா……? மக்களின் சிரமத்தைப் போக்க 800 சிறப்பு பேருந்துகள் இயக்கம் தமிழக அரசு நடவடிக்கை…..!

பொதுவாக பண்டிகை காலம் என்று வந்து விட்டாலே சென்னையில் இருக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளின் வாசிகள் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்று பண்டிகையை கொண்டாட வேண்டும் என்று விரும்புவது வழக்கம்.

அந்த வகையில், நாளை தமிழ்நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. அதிலும் வார இறுதி நாட்களில் இந்த பக்ரீத் பண்டிகை வருவதால் மாநிலம் முழுவதும் இருந்து தங்களுடைய சொந்த ஊருக்கு சென்று திரும்புவார்கள் பொதுமக்கள். ஆகவே பயணிகள் சிரமம் இன்றி சொந்த ஊர்களுக்கு சென்று திரும்பும் விதமாக, இன்று சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய பகுதிகளுக்கு தினசரி பேருந்துகளுடன் கூடுதலாக 400 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது.

மதுரை, கோவை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து முக்கிய இடங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து கழகம் தெரிவித்திருக்கிறது. அத்துடன் பெங்களூருவில் இருந்து மற்ற பகுதிகளுக்கு 400 பேருந்துகள் என்று ஒட்டுமொத்தமாக 800 பேருந்துகள் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Next Post

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் ஜூலை 20ஆம் தேதிக்குள் இது நடந்தாக வேண்டும்…..! பள்ளிக்கல்வித்துறை பிறப்பித்த அதிரடி உத்தரவு……!

Wed Jun 28 , 2023
பொதுவாக எல்லோரும் தங்களுடைய பள்ளிப்பருவ காலங்களை நினைத்துப் பார்க்கும்போது பரவசமடைவார்கள். ஏனென்றால் அந்த பள்ளிப் பருவ காலத்தில் தான் தற்போதுள்ள எந்தவித பிரச்சனையும் தங்களுடைய மனதை பாதிக்காமல் இருந்ததாகவும் அவர்கள் கருதுவார்கள். இன்னும் சொல்லப்போனால் நாம் பள்ளி அல்லது கல்லூரிகளில் மாணவராகவே இறுதிவரையில் இருந்திருக்கலாமோ என்று நினைக்கும் மனிதர்களும் இன்றளவும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படி ஒரு மாய உலகம் அந்த மாணவர் பருவத்தில் தான் கிடைக்கும். ஆனால் அந்த மாணவர் […]

You May Like