fbpx

“திமுக அரசுக்கு பாராளுமன்றத் தேர்தலில் தகுந்த பாடம் கற்பிக்கப்படும்…” முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.!

திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு மக்கள் கடும் பாடம் புகட்டுவார்கள் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நடைபெற்ற பூத்த ஏஜென்ட்கள் மாநாட்டில் பேசிய போது தெரிவித்தார் .

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அம்மையார் கொண்டு வந்த பல திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது என சுட்டிக்காட்டிய அவர், தற்போதைய திராவிட முன்னேற்றக் கழக அரசு மக்கள் விரோத அரசியலை கடைப்பிடித்து வருகிறது எனவும் கூறி இருக்கிறார். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் நான்கு ஆண்டுகள் அரசே சிறந்தது என மக்கள் கூறி துவங்கிவிட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

வருகின்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட காத்திருக்கிறார்கள். முதலமைச்சர் தீபாவளிக்கு மக்களுக்கு வாழ்த்து கூறவில்லை இதற்காகவே அவருக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் எனவும் தெரிவித்திருக்கிறார். வருகின்ற தேர்தல்களில் அதிமுகவிற்கு மக்கள் பெரும்பான்மையான ஆதரவை தெரிவிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

வருகின்ற தேர்தலில் அதிமுக 39 பாராளுமன்ற தொகுதிகளையும் கைப்பற்றும் என தெரிவித்த ஆர்.பி.உதயகுமார். மீண்டும் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் தலைமையிலான அதிமுக ஆட்சி மலரும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் திமுக அரசின் மீது மக்களுக்கு இருக்கும் அவநம்பிக்கையை வாக்குகளின் மூலம் அறியலாம் எனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

Kathir

Next Post

வீடுகளில் பயன்படுத்தப்படும் இந்த பொருளால் ரத்தப் புற்று நோய் அபாயம்..! விபரம் என்ன.?

Wed Nov 22 , 2023
நம் வீடுகளில் பூச்சிகளின் தொல்லையில் இருந்து நம்மை காத்துக் கொள்வதற்காக நாப்தலின் உருண்டைகளை பயன்படுத்துகிறோம். இவை நிலக்கரியில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பொருட்களுடன் வாசனை பொருட்களும் கலந்த தயாரிக்கப்படும் உருண்டைகள் ஆகும். இவற்றில் இருந்து வெளியேறும் வாயுவினால் பூச்சிகள் இவை இருக்கும் இடத்திற்கு வராது. இதனால் பூச்சி தொல்லை அதிகமாக இருக்கும் இடங்களிலும் நாம் துணிகள் வைத்திருக்கும் அலமாரி போன்றவற்றிலும் இந்த உருண்டையை பூச்சிகளில் இருந்து நம் பொருட்களை பாதுகாப்பதற்காக பயன்படுத்துகிறோம் […]

You May Like