கோவையில் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என மின்னஞ்சல் மூலம் மிரட்டல். சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சல் மூலம் கோவையில் பல இடங்களில் பெட்ரோல் குண்டு வெடிக்கும் என என தகவல் சென்றுள்ளது. உடனடியாக போலீசார் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பை தீவிர படுத்தியுள்ளனர். சந்தேகத்திற்கு இடமான நபர்களை காவல்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து பேசிய கோவை காவல் ஆணையர்; கோவையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மிரட்டல் போலியான கணக்கில் இருந்து வந்துள்ளதாகவும், விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல் ஆணையர் தகவல் தெரிவித்துள்ளார். இ-மெயில் ஐடி சாத்தூரை சேர்ந்த இசக்கி என்பவரின் பெயரில் இருப்பது கண்டுபிடிப்பட்டுள்ளது. முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றன.